தி.க. தலைவர் கி.வீரமணி கண்டனம்
சென்னை, அக். 28- சேலம் பெரியார் பல்க லைக் கழகத்தில் பாஜகவினர் ஆலோசனை நடத்த அனு மதி அளித்தது எப்படி என்றும் அதிமுக ஆட்சியில் தந்தை பெரியார் அவமதிக்கப்படு வது வெட்கட்கேடு என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளர். கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற 19 ஆவது பட்ட மளிப்பு விழா அழைப்பித ழில் தந்தை பெரியாரின் படத்தைக் கூட அழைப்பித ழில் போடாமல் புறக்கணிக்க வைத்த சக்தி எது என்று ஆராய வேண்டியுள்ளது. மட்டுமல்லாமல், பெரியார் சிலைக்குப் பின்னணியில் பிள்ளையார் சிலை, ஸ்வஸ்திக் சின்னம், சூலா யுதம் ஆகிய சின்னங்களை வண்ண விளக்குகள் மூலம் இடம் பெறச் செய்தது ஏதோ தெரியாமல் செய்தது அல்ல.
கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி எந்த மக்கள் பிரதிநிதி யும் இல்லாத எச்.ராஜா, துணைவேந்தர் இல்லாத நிலையில் துணைவேந்தர் அறைக்குள் பா.ஜ.க. பிரதி நிதிகள் 19 பேர், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி, ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியும், ஆட்சிக்குழு உறுப்பினருமான குமார சுவாமி ஆகியோருடன் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை நடத்தியது அப்போதே பலத்த சர்ச்சையை கிளப்பியது.
புதிய துணைவேந்தர் வந்த பின், மதச்சார்பற்ற நிலையில் இயங்கி வந்த பெரியார் பல்கலைக் கழ கத்தின் வடிவம் மாற்றப்பட்டு வருகிறது. துணைவேந்தர் அறையில் திடீரென சரஸ்வதி படம் பெரிய அளவில் மாட்டப்பட்டுள்ளது.அண்ணா பெயரில் தி.மு.க. வையும் இணைத்துள்ள அண்ணா தி.மு.க. ஆட்சி யில், தந்தை பெரியார் அவ மதிக்கப்படுவது வெட்கக் கேடு. இதுகுறித்து தமிழக அர சிடமிருந்து விளக்கம் தேவை. ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக இருந்துவரும் பெரியார் பல்கலைக் கழ கத்தின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல், இதனை மக்கள் பிரச்சனை யாக வீதிக்குக் கொண்டு வரும் வகையில் முதற்கட்ட மாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்ச ரிக்கிறோம். திருந்த மறுத்தால் பல்வேறு அனைத்துக் கட்சி கள் ஒருங்கிணைந்த போராட்டங்களும் தொட ரக்கூடும். பெரு நெருப்புடன் விளையாடாதீர். பெரியாரை அவமரியாதை செய்வதை பொறுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி யுள்ளார்.