tamilnadu

காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை,ஆக.13- காவிரி நதியோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன.இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்   டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை செவ்வாயன்று திறக்கப்பட்டது. இதற்கிடையே, காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.  இதைத்தொடர்ந்து  காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு  தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதில்  காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

;