tamilnadu

img

விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்: பொதுப்பணித்துறை

சென்னை, மே. 6 - தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கிலிருந்து விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கோடை காலத்தில் பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்க ளுக்கு தேவையான களிமண், வண்டல்  மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விலை யில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். தங்கள்  கிராமத்திலோ அல்லது அருகாமை கிரா மத்திலோ உள்ள ஏரிகள் மற்றும் குளங்களி லிருந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம். இந்த உத்த ரவு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தாது.