மே. பாளையம், ஆக. 4- மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப் படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணை தமிழக – கேரள எல்லையோர வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 100 அடியாகும். இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், செவ்வாயன்று அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்து கொண்டிருந்த 22 ஆயிரம் கன அடி நீரும் பவானியாற் றில் வெளியேற்றப் பட்டது. மழை கார ணமாக ஏற்கனவே ஆற்றின் வேகம் உயர்ந்திருந்த நிலையில், அணை யின் உபரி நீர் வெளியேற்றப் பட்டதால் பவானி யாறு கரைபுரண்டு ஓடத்துவங்கியது. இதனையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகைப் பகுதிகளில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஆற்றின் வரத்து குறித்து நேரில் ஆய்வு செய்த மேட்டுப் பாளையம் வட்டாச்சியர் சாந்தாமணி, ஒலிப்பெருக்கி மூலம் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ முயற்சிக்கக்கூடாது என எச்சரித்த தோடு, கரையோரம் உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லவும் அறி வுறுத்தினார். வருவாய்த்துறையோடு இணைந்து காவல்துறை, மற்றும் தீய ணைப்பு மீட்புப்படையினர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரி வித்தார்.