விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதை அடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூன் 10-ஆம் தேதி நடைபெற்றது. திமுக சாா்பில் அன்னியூா் அ.சிவா, பாமக சாா்பில் சி.அன்புமணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் பொ.அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 1,24,053 வாக்குகள் பெற்றுள்ளார்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கா.அபிநயா 10,602 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.