அன்புஜோதி காப்பகம் தொடர்பான விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
விழுப்புரம் அருகே அன்புஜோதி காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை, அடித்து கொடுமைப்படுத்துதல் மற்றும் ஆள்கடத்தல் தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பிறகு சிபிசிஐடி நடத்திய விசாரணையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெறியவந்த நிலையில் தற்போது சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் மட்டுமெ கிடைக்கும் 8 வகையான 41,009 மனநல மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாத்திரைகள் ஆசிரமத்திற்கு கிடைத்தது குறித்து விசாரிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடக போலிசாரின் லெட்டர் பேடு, சீல்களை பயன்படுத்தி ஆசிரமவாசிகள் இடமாற்றம்
ஆசிரமத்தில் கொடுமை தாங்காமல் 4 ஆண்டுகளில் 2 முறை தப்பித்தேன் என பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்
காப்பகத்திலிருந்து மாயமான ஜெபருல்லாவின் அடையாளத்தில் பெங்களூருவில் ஆண்சடலம் கண்டுபிடிப்பு. உறவினர்கள் ஒத்துழைத்தால் டிஎன்ஏ சோதனை செய்ய தயார். என சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.