tamilnadu

img

கள்ளச்சாராய மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 40க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 13-ஆம் தேதி திடீரென வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டு, புதுவை, மரக்காணம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் மரணம் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.