tamilnadu

விருதுநகர் நகராட்சி முற்றுகை

விருதுநகர்:
விருதுநகர் நகராட்சி 29- ஆவது வார்டுக்குட்பட்டது பி.பி.வையாபுரி நந்தவனம் தெரு. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்தஜூலை 17- ஆம் தேதி இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய் யுப்பட்டது. பல வீடுகளுக்கு குடிநீர் வரவில்லை. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதியிடம் மனு அளித்தனர். மெயின் குழாயில் அடைப்புகள் இருந்தால் குடிநீர் வருவதில் சிரமம் இருக்கும் .எனவே, அதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்துள்ளார் ஆணையர். ஆனால் அந்தப் பணி நடைபெறவே இல்லை.

இந்த நிலையில், திங்களன்றுகுடிநீர் வழங்கப்பட்டது. அப் போது பல வீடுகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால், ஆவேசமடைந்த பெண்கள், நகராட்சி அலுலவகத்தை முற்றுகையிட்டனர். வராத குடிநீருக்கு எப்படிக் கட்டணம் செலுத்த முடியும்.குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

;