tamilnadu

திருவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் மண் பரிசோதனை

திருவில்லிபுத்தூர், ஆக.1- திருவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதி யில் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்தக் குளத்தின் சுற்றுப்புற சுவர்கள் சேதமடைந்துள்ளது. இதை யடுத்து சுற்றுப்புற சுவர்களை சீரமைத்து குளத்தைப் புதுப்பிக்க ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்பேரில் அனுமதிபெற்று தற்போது திட்ட மதிப்பீடு செய்யும் பணி நடை பெற்று வருகிறது. இதற்கிடையே புதுப்பிக் கும் முன் குளத்தில் மண் தரம் எவ்வாறு உள்ளது? என்பதை அறிய மண் பரி சோதனை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து மண் பரி சோதனை நடைபெற்றது. இதுகுறித்து அதி காரி ஒருவர் கூறியதாவது:- திட்ட மதிப்பீடு செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர் கோவில் குளத்தை சீரமைத்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.