tamilnadu

img

போக்குவரத்து கழகத்திற்கு தேவையான நிதிகளை வழங்கிடுக... சிஐடியு வலியுறுத்தல்

விருதுநகர்:
தமிழக அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது. போக்குவரத்து கழகத்திற்குதேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.அரசாணை 288 ஐ ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2019 ஏப்ரல் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகையினை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் 23 வதுமாவட்ட பேரவையில் தீர்மானங்கள் நறைவேற்றப் பட்டன. விருதுநகரில் தோழர் எம்.மீனாட்சி சுந்தரம் நினைவரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். பி.பாண்டியன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை கே.ஜீவானந்தம் முன்மொழிந்தார். சங்க கொடியை ஆர்.அழகர்சாமி ஏற்றி வைத்தார். துவக்கி வைத்து சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.மகாலட்சுமி பேசினார். பொதுச் செயலாளர் எம்.கார்மேகம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வரவு செலவு அறிக்கையை எம்.முத்துராஜ் முன்மொழிந்தார். மத்திய சங்க உதவித் தலைவர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், ஜி.வேலுச்சாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சம்மேளன உதவித்தலைவர் வி.பிச்சை சிறப்புரையாற்றினார். 

புதிய நிர்வாகிகள் தேர்வு : மண்டலத் தலைவராகஏ.சுந்தர்ராஜ், பொதுச் செயலாளராக எம்.வெள் ளைத்துரை, பொருளாளராக எம்.முத்துராஜ், உதவித்தலைவர்களாக ஜி.வேலுச்சாமி, பி.என்.தேவா, எம்.மகாலட்சுமி, டி.சன்னாசி, பி.பாண்டியன், கே.தமிழரசன், ஆர்.கண்ணன், எஸ்.ஆறுமுகம், எம்.முத்தமிழ்ச்செல்வன், உதவிச் செயலாளர்களாக எம்.கார்மேகம்,எம்.முனீஸ்வரன், கே.ரமேஷ்பிரபு, பி.வீரராகவன், ஜி.திருப்பதி, என்.சரவணன், ஜி.ராஜா, பி.செல்வக்குமார், பி.ஜீவானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.