tamilnadu

img

மும்பையில் தவிக்கும் தமிழக ஜவுளி வியாபாரிகள் மராட்டிய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கடிதம்

விருதுநகர், மார்ச்.30- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச்  சேர்ந்த 106  ஜவுளி வியாபாரிகள் மும்பையில் ஊரடங்கு காரணமாக சிக்கித் தவித்து வருகின்றனர். ஊரடங்கு நிறைவடைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் அவர்களை அங்கிருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது :    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்த சுமார் 106 பேர் ஜவுளிப் பொருட்களின் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் மும்பைக்கு பயணம் செய்தனர். ஆனால் நாடு முழுவதும்  கோவிட்19,கொரோனா வைரஸினால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு  ஜவுளி பொருட்கள் விற்பனைக்கு சென்றவர்கள்  தங்கள் மாநிலத்திற்கு திரும்புவதற்கான வழி இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும்  குறைந்த வருமானம் கொண்ட சாதாரண தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் மும்பையில் தங்குவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, மும்பையில்  மட்டுங்கா லேபர் கேம்பில் தங்கி உள்ளனர். இதனால்,  அவர்களது குடும்பத்தினர்  ஆழ்ந்த மன அழுத்ததில் உள்ளனர். மேலும், தொடர்  தடை ஏற்பட்டால் அவர்களின் நிலைமைகள் மோசமாகும். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு  அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.தயவுசெய்து தமிழ்நாட்டிற்கு திரும்புவதற்காக அந்த மக்களுக்கு உதவ மும்பையிலிருந்து-மதுரைக்கு விமானங்கள் மீண்டும் தொடங்கப்படும் போது அவர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.