விருதுநகர், மார்ச் 31- விருதுநகர் அரசுத் தலைமை மருத்துவமனையில் ஒரே நாளில் 13 பேரும் இராஜபாளையத்தை சேர்ந்த மூவர் என மொத்தம் 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தில்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்ற இவர்கள் தற்போது விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இவர்களை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஆட்சியரகத் தில் இதுதொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆட்சியர் கண்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.