கார்ப்பரேட் ஒப்பந்தத்திற்கே முதல்வர் வெளிநாடு பயணம் ஆர். நல்லகண்ணு குற்றச்சாட்டு
விருதுநகர், செப். 3- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளி நாட்டு பய ணம் சென்றுள்ளது, கார்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவே என சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறி யுள்ளார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் செய்தியாளர் களைச் சந்தித்த அவர் கூறியதாவது : பாஜக அரசால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசுடமை யாக்கப்பட்ட வங்கிகளை 12 ஆகக் குறைப்பதால் சிறு தொழில், தொழில் தொடங்குவோர் பாதிக்கப்படுவர். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். இது கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். ராணுவத் தள வாடங்கள் தயாரிப்பை தனியாருக்கு வழங்குவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். குடிநீர் பிரச்சனையைத் தீர்க்காமல் தமிழக அரசு, பாஜக வின் எடுபிடியாக மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், சொத்து வரி அதி கரித்துள்ளது. அதிகாரிகளை வைத்து சொத்து வரி உயர்த்தப் பட்டுள்ளது என்றார்.
ஜெர்மனி உணவு திருவிழாவில் விஎச்பி அராஜகம்
திருவனந்தபுரம், செப். 3- ஜெர்மனி கேரள சமாஜன் ஏற்பாடு செய்திருந்த உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதை தடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த குண்டர்கள் முயன்றனர். பிராங்பர்ட் இந்திய தூதரகம் இந்தியன் பெஸ்ட் என்கிற விழாவை நடத்தியது. இதன் ஒருபகுதியாக கேரள சமாஜம் உணவுத்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி கேரளத்தின் உணவின் பகுதியாக உள்ள பரோட்டாவும் மாட்டிறைச்சியும் உணவுப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இந்த உணவுப்பட்டியிலை பார்த்த விஷ்வ ஹிந்து குண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாட்டிறைச்சி இந்து பண்பாட்டுக்கு எதிரானது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகள் தலையிட்டு மாட்டிறைச்சியை உணவுப்பட்டியலிலிருந்து நீக்குமாறு கேரள சமாஜ நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர். இதனால் அதிருப்தி அடைந்த கேரள சமாஜம் விழாவை புறக்க ணித்தது. மதத்தின் பெயரால் வெறுப்பை உமிழும் விஎச்பியின் நடவடிக்கைக்கு எதிராக பிராங்பட்டில் உள்ள மலையாளிகள் போராட்ட முழக்கம் பொறித்த பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். விஎச்பியின் பாசிச நிலைபாடுக்கு எதிராக வலுவான போராட்டம் நடத்தப்படும் என கேரள சமாஜம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.