tamilnadu

விழுப்புரம், வேலூர், கடலூர் முக்கிய செய்திகள்

செஞ்சி வாரச்சந்தையில்  ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
செஞ்சி,அக்.26- தீபாவளி பண்டிகையையொட்டி செஞ்சி வாரச்சந்தை யில் சுமார் ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடை பெற்றுள்ளதாக வியாபாரி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரச்சந்தை உள்ளது.  இந்த சந்தையில் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி மற்றும் பண்டிகை  காலங்களில் ஆடுகள் அமோகமாக விற்பனை நடைபெறுவது  உண்டு. அதன்படி தற்போது தீபாவளியை முன்னிட்டு ஆடுகள்  விற்பனை அதிகாலை முதலே களை கட்டியது. இதற்காக வியாபாரிகள் ஆடுகளை வாங்கி ஏற்ற லாரி வேன்களை கொண்டு வந்து நிறுத்தி விட்டனர். செஞ்சி, சேத்துப்பட்டு, கீழ் பெண்ணாத்தூர் ஆகிய பகுதி களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. வழக்கத்தை விட தரத்திற்கும் ஆடுகள் கூடுதல் விலை  போனது. ஒரு ஆடு ரூ.4 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஆட்டின் தரத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப விலை போனது. விழுப்புரம், கடலூர், திருச்சி, சேலம், சென்னை மற்றும்  புதுவை, பெங்களூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரேநாளில் 15 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சுமார் ரூ 8  கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றிருக்கும் என வியாபாரி  ஒருவர் தெரிவித்தார்.

இருவேறு ஏ.டி.எம்களில் மிளகாய்ப்பொடி தூவி கொள்ளை முயற்சி
வாணியம்பாடி, அக். 26- வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருவேறு ஏ.டி.எம்களில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடி தூவி யுள்ளனர். அம்பலூர் பகுதியிலுள்ள இந்தியா ஒன் ஏடிஎம்மிலும் தெக்குப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்மிலும் நள்ளிரவில் அடுத்தடுத்து இந்த கொள்ளை முயற்சிகள் நடை பெற்றுள்ளன. கைரேகை பதிவதைத் தவிர்க்க கையுறை அணிந்தும் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிள காய்ப்பொடி தூவியும் சிசிடிவி கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடித்தும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால்  இயந்திரத்தை திறப்பதற்கான அவர்களது முயற்சி தோல்வி யடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் பணம் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறும் காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

14 பேருக்கு டெங்கு பாதிப்பு
கடலூர், அக். 26- கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு பாதிப்புடன் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழைக் காலத்தை முன்னிட்டு கொசுக்களால் பரவக்கூடிய  காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. இதன்படி,  வெள்ளிக்கிழமை (அக்.25) நிலவரப்படி 8 ஆண்கள், 6 பெண் களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத னையடுத்து, அவர்கள் டெங்குவிற்கான சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் இதுவரையில் 36 பேர் காய்ச்ச லால் அனுமதிக்கப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகள் பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கால்பந்து போட்டி: கோவா சென்ற தமிழக வீரர்கள்
வேலூர், அக்.26- தேசிய அளவிலான ஜூனியர் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாட தமிழக வீரர்கள் கோவா புறப்பட்டுச்  சென்றனர். இந்திய அளவில் 13 மாநிலங்கள் பங்கேற்கும் 17 வயதுக்கு  உள்பட்டோருக்கான தேசிய அளவிலான ஆண்கள் ஜூனி யர் கால்பந்து போட்டிகள் கோவாவில் வரும் 26, 27 ஆகிய  இரு நாட்கள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் தமிழகம்  சார்பில் விளையாட ராணிப்பேட்டை கால்பந்து கழக வீரர்கள்  17 தேர்வாகினர். இவர்கள் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தி லிருந்து கோவா புறப்பட்டனர். அவர்களை ராணிப்பேட்டை கால்பந்தாட்ட மேலாளர் கெல்லீஸ் பி.மோகன், நிர்வாகி லியோ உள்ளிட்டோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.