கும்பல் படுகொலைகளை தடுக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபல சமூக ஆர்வலர்கள் 44 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கை திரும்பப் பெறக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.