அருப்புக்கோட்டை, மே.21- விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை பெரியபுளியம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் மதிராணி. இவர் எம். ரெட்டியபட்டியில் உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் அருண் குமார். ஆந்திரா வில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். மதிராணி தனது மாமனா ரான தனுஷ்கோடி வீட்டில் வாழ்ந்து வரு கிறார். இந்த நிலையில், புதனன்று தூங்கச் சென்ற இவர் தூக்கில் தொங்கியதாகத் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த அருப்புக் கோட்டை நகர் காவல் துறையினர் மதி ராணியின் உடலை கைப்பற்றி உற்கூரா ய்வுக்காக அனுப்பி வைத்தனர்.