tamilnadu

img

கொரோனா பாதிப்பு காரணமாக பலா விற்பனையில் மந்தம்

திருவில்லிபுத்தூர், மே 25- கொரோனா பாதிப்பு கார ணமாக பலா விற்பனையில் மந்தமான சூழ்நிலை உள்ள தாக வியாபாரிகள் தெரிவித்த னர். திருவில்லிபுத்தூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராள மான நிலங்களில் விவசாயி கள் பலா பயிரிட்டு உள்ள னர். தற்போது பலா பழ சீசன் என்பதால் திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு பகுதி யில் இருந்தும் விற்ப னைக்காக பலாப்பழங்கள் வந்துள்ளன. பொதுவாக பலாப் பழ ங்கள் விற்பனைக்கு வந்தவு டன் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதனால் விரைவாக விற்பனையாகி விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதி ப்பு காரணமாக பல்வேறு  பகுதிகளுக்கு பலாப லன்களை எடுத்துச் செல்வ தில் சிக்கல் இருப்பதால் விற்பனையில் மந்தம் ஏற்ப ட்டுள்ளது. பொதுமக்களும் பலா பழங்களை வாங்குவ தற்கு போதிய ஆர்வம் காட்ட வில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.