விழுப்புரம். அக்.15- விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி யில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜன்பாபு. கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்ற இவர் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர்ந்து தற்போது முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கணித ஆசிரியரான இவர் கணிதம் கற்பித்தல் திறன் கொண்டு மாணவர்க ளுக்கு எளிய முறையில் கணிதத்தை கற்பித் துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளி மாண வர்களில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்க ளுக்கு மிகச் சிறந்த முறையில் கணிதம் கற்பித்தல் செயலுக்காக ‘டையோசிஸ் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராஜன் பாபு 2003-ல் கணிதமேதை ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது இவ ரது கணித செயல்முறை மாதிரியானது மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. மேலும் இவரது கற்பித்தல் பணிக்காக கலாம் சாதனை புத்தகத்தில் சாதனை விருது பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயி லும் மாணவர்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் மாணவர் இவர் என்பதால் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் ந.கயல்விழி இவரை பாராட்டினார். மேலும் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் ந.கயல்விழி, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி ஆகி யோரும் பாராட்டினார். இவர்களுடன் நேர்முக உதவியாளர் சேவியர் சந்திரகுமார், கல்லூரி மேலாளர் க.சேகர் மற்றும் எல்ஜி செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.