tamilnadu

பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணிற்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்குக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

விழுப்புரம், ஜூன் 22- பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு ரூ. 10 லட்சம்  நஷ்ட ஈடு வழங்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விழுப்பு ரம் வடக்கு மாவட்டச் செய லாளர் என்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: .விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட விநாய கபுரத்தில் வசிப்பவர் தலித்  சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். இவரது 18 வயது மகளும், சூரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வன்னி யர் சமூகத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (24) என்பவ ரும் காதலித்து வந்துள்ள னர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணை சிலர் கூட்டு பலாத்காரம் செய் துள்ளனர். இந்த காட்டு மிராண்டித்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடி யாக  காவல்துறை கைது  செய்துள்ள 4 குற்றவாளி களையும் பிணையில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு தரமான  சிகிச்சை அளிக்க வேண்டும், இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டச் செய லாளர் என்.சுப்பரமணியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஏ.சங்கரன், ஒன்றி யச் செயலாளர் கே.குப்பு சாமி, மாவட்ட குழு உறுப்பி னர்கள் பி.சௌந்தரராஜன், என்.பழனி, மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சித்ரா, தலைவர் எஸ்.நீலா, பொருளாளர் எஸ்.அமுதா, ஒன்றியச் செயலாளர் கே. ராஜேஸ்வரி, தலைவர் ஏ.சித்ரா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அய்யனார், ராஜவேல், கலியபெருமாள் ஆகியோர் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடுபத்தி னரை நேரில் சந்தித்து ஆறு தல் கூறினர்.