tamilnadu

img

அடிப்படை வசதிகளை சரிசெய்ய மனு

ஈரோடு,ஜன 24- ஜம்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள  அடிப்படை வசதிகளை சரி செய்து கொடுக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். இம்மனுவினை அளித்தப்பின் சிபிஎம் பெரியமேளபா ளையம் கிளை செயலாளர் வி.தமிழ்ச்செல்வன் கூறுகை யில், தளவாய் பேட்டை வைரமங்கலம் செல்லும்  வழியில் பழுதடைந்தும், குண்டும் குழியுமாக உள்ள  தார்சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும்.  அதே பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு  நேரங்களில் பொதுமக்கள் செல்ல சிரமப்படுகின்ற னர். ஆகவே மின் விளக்கு வசதியை ஏற்படுத்திக்  கொடுக்க வேண்டும்.மேலும் பெரிய மாரியம்மன்  கோவில் அருகே உள்ள குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் இரும்பு குழாய் அமைத்து, மீண்டும் பழுதடையாமல் பாதுகாக்க வேண்டும். மேலும் அரசு வினோபா பள்ளியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளி அருகே உள்ள சாலையில், வாகனங்கள் வேகமாக வருவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைத்து கொடுக்க  வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தியதாக தெரிவித்தனர் இதில், சிபிஎம் தாலுகா கமிட்டி உறுப்பினர் எஸ்.மாணிக்கம், நிர்வாகிகள் பி.பெரியசாமி, எஸ்.வெள்ளி வேல்  உட்பட பலர் உடனிருந்தனர்.

;