விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட கிளியனூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள பெரிய ஏரி, விநாயகர் குளம் ஆகியவற்றின் கரைகளின் மீது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பனைமர விதை நடும் விழா அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிமூலம், ராஜாராம், இரணியன், அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், துணைத்தலைவர்கள் சிவமுருகன், அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.