விருதுநகர், மே 24- விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஏராளமான அடி பம்புகள் பழுது நீக்கப்படவில்லை. இதனால், மக்கள் புழக்கத்திற்கான தண்ணீரைத் தேடி அலைகின்றனர். விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டு களில் சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. குளிப் பது, துவைப்பது, பாத்திரங்களை கழுவு வது உள்ளிட்ட தேவைகளுக்காக தங்கள் பகுதியில் உள்ள சின்ட்டெக்ஸ் டேங்க் மற் றும் அடி பம்புகளில் வரும் உப்பு நீரை நம்பியே மக்கள் உள்ளனர்.
விருதுநகர் நகராட்சிப் பகுதியில் 250- க்கும் மேற்பட்ட அடி பம்புகள் உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட பம்புகள் பழு தாகி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி றது. அவற்றை சரி செய்ய நகராட்சி நிர்வா கம் முன் வரவில்லை. அடி பம்புகளை பழுது நீக்கம் செய்வதற்கு டென்டர் விடப்பட் டுள்ளது. ஆனால் அவை பழுது பார்க்கப்பட வில்லை. மக்கள் நகராட்சியில் உள்ள புகார் புத்தகத்தில் பதிவு செய்து வைத்தாலும் அதிகாரிகள் பழுது நீக்க போதிய அக் கறை காட்டவில்லை. இதனால் மக்கள் புழக்கத்திற்கான தண்ணீர் பிடிக்க பிற பகுதிகளுக்கு செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம், உடனுக்குடன் அடி பம்புகளை பழுது பார்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந் துள்ளது.