tamilnadu

மின்னல் தாக்கி ஒருவர் பலி  

சாத்தூர், மே 30- சாத்தூர் அருகே பட்டாசு ஆலை மீது  மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.  சாத்தூர் அருகே உள்ளது செல்லையாபுரம்பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை அன்பின் நகரத்தில் உள்ளது. கடந்த திங்களன்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, பட்டாசு ஆலை மீது மின்னல் தாக்கியது. இதில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறை முழுவதும் சேதமானது.  இந்த விபத்தில், அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த வெம்பக்கோட்டை அருகே உள்ள கண்டி யாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனபால்(56), கீழ செல்லையாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி(22) ஆகியோர்  படுகாயமடைந்தனர்.   இருவரும் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தனபால் உயிரிழந்தார். ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;