tamilnadu

வீடு புகுந்து  நகை கொள்ளை

 திருச்சுழி, மே 31- திருச்சுழி  வட்டம் நரிக்குடி அருகே உள்ளது கல்விமடை. இப்பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி மற்றும் இவரது மனைவியும் 100 நாள் வேலைக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், அவரது மகள்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்களாம். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், சிறுமிகளிடம் கத்தியைக் காடி மிரட்டி னார்களாம். எனவே, சிறுமிகள் இருவரும் ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வர சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த 5 பவுன் தங்க நகைகள் மற் றும் ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;