திருவில்லிபுத்தூர், ஜூன் 27- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி கலந்துகொண்ட அரசு விழாவில் பங்கேற்றவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்தனர். எரிச்சல் அடைந்த அமைச்சர் நிகழ்ச்சியின் பாதியி லேயே புறப்பட்டுச் சென்றார். விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி யை முதல்வர் பறித்துக்கொண்டார். அதிமுகவைப் பொறுத்தமட்டில் என்னதான் அமைச்சராக இருந்தாலும் மாவட்டச் செயலாளர் பொறுப்புதான் முக்கியமானது. கட்சி பொறுப்பு பறிபோன நிலையில் அடுத்ததேர்தலுக்கு இன்னும் ஒருவருடமே உள்ள நிலையில் அமைச்சர் எனக்கூறி மாவட்டத்தில் வலம் வந்துகொண்டிக்கிறார். இந்த நிலையில் வத்திராயிருப்பு பேருந்து நிலையம் அருகே மூன்றரைக் கோடி ரூபாயில் சுமார் 12,000 சதுர அடி பரப்பளவில் வட்டாட்சியர் அலுவல கம் கட்டுவதற்கான பூமி பூஜை அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பூமி பூஜையை முறைப்படி துவக்கி வைத்தார். தொடர்ந்து புதிதாக அமைக்கப்படவுள்ள வட்டாட்சியர் அலு வலகத்தின் வெளிப்பகுதியில் மரம் நடுவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதிதாக அமைய உள்ள வட்டாட்சியர் அலுவல கம் அருகே ஒரு பிரிவினர் கோவில் கட்டி வருகின்ற னர். சுமார் 20 சென்ட் அரசு நிலம் கோவிலுக்காக எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விப ரத்தை அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவிக்காததால் நிலத்தை ஆக்கிரமித்து உள்ள ஒரு பிரிவினர் அமைச்சர்களை முற்றுகையிட்டு நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்கும்படி வற்புறுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் எரிச்சலடைந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் இரு வரும் வட்டாட்சியர் ராமதாஸ் ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் நிகழ்ச்சியை புறக்கணித்து வேகமாக தங்க ளது வாகனத்தில் ஏறி இடத்தை விட்டு வெளியேறி னர். இதையடுத்து வட்டாட்சியர் தாமே மரக்கன்று களை நட்டார்.