விழுப்புரம், மே 10- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற் குட்பட்ட கண்டாட்சிபுரம் அருகே நல்லாபாளையம் கிராமத்தில் வசிக்கும் இருளர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (32). கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை மோசமடையவே கடந்த 7 ஆம்தேதி மருத்துவமனை நிர்வாகத்தால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னையிலிருந்து ஊருக்கு வந்த அவர்களுக்கு உடனடியாக மாவட்ட சுகாதார துறை கொரோனா பரிசோதனை நடத்தியது. அதில் இறந்து போனவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், மருத்துவமனையில் அவரை கூட இருந்து கவனித்து வந்த முனியம்மா, தனம் ஆகி யோருக்கு கொரோனா உறுதி யானது. இதனைத் தொடர்ந்து, இருவரையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், உடல் நிலை மோசமான நிலையில் இருந்த அய்யனாரை கவனிக்க ஆள் யாரும் இன்றி 8 ஆம் தேதி மாலை சுமார் 6 மணிக்கு உயிரிழந்தார். அப்போது அவரது 11 வயது மகன் ஜீவா மட்டுமே கூட இருந்து உள்ளான். இறந்தவர் உடலை வீட்டை விட்டு வெளியே எடுக்கக் கூட அதிகாரிகள் விடமால் சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக மறுநாள் வரை அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். மேலும், ஊடகங்களிலும் சமூக வலைதளங்களில் செய்தி வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் உறவினர்கள் உதவியுடன் அய்யனாரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனிடையே, அங்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம், அய்யனார் உடலை அடக்கம் செய்வ தற்காக அவரது தாய், மனை வியை அனுமதிக்க வேண்டு மென உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பேரில், அரசு மருத்து வமனையிலிருந்து அவரது தாய் முனியம்மாள், மனைவி தனம் ஆகியோர் ஆம்பு லன்ஸில் அழைத்து வரப் பட்டனர். இதையடுத்து, ஊர் பொது மக்கள் சார்பில், அய்யனார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதை சற்று தொலைவில் இருந்தபடி பார்த்து அவரது தாயும், மனைவியும் கண்ணீர் விட்டு அழுதனர். மீண்டும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.. இதைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், அந்த குடும்பத்துக்காக சிறுவன் ஜீவாவிடம் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். தொடர்ந்து, திமுக சார்பிலும், ரூ.10 ஆயிரம் நிதி அளித்தனர்.
சிறுவனின் நலன் கருதி, அவரது தாய், பாட்டியை வீட்டில் வைத்து தனிமைப்படுத்த வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தகவலை கேள்விப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் ரூ.10 அனுப்பி உதவி செய்துள்ளார். கொரோனா இல்லாத இறந்த ஒருவரின் சடலத்தை எடுக்க சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக சிறுவன் மற்றும் உறவினர்களை அதிகாரிகள் மனிதாபிமானம் இல்லாமல் அலைகழித்தது குறிப்பிடத்தக்கது.