விருதுநகர்.டிசம்பர்.16- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் கோயிலின் அர்த்தமண்டபத்திலிருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றிருந்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்குக் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டார்.
இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்த்தமண்டபத்திற்குள் செல்ல ஜீயர்களுக்கு மட்டுமே அனுமதி இருப்பதாகக் கூறி இளையராஜாவை ஜீயர்கள் வெளியேற்றியனர். பின்பு இளையராஜா மண்டபத்திற்கு வெளியிலேயே நின்று வழிபாடு நடத்தினார்