tamilnadu

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது

சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.25- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறி விக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாவட் டக்குழு வலியுறுத்தியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் கணபதி நகர் அலு வலகத்தில், மாவட்டக்குழு கூட் டம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.தமிழ்ச்செல்வி தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் முன்னிலை வகித்து, தீர்மானங் களை முன்மொழிந்து பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆலோசனை வழங்கினார்.  கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் குறித்து மாவ ட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறியதாவது: காவிரிப் படுகையை பாது காக்க விவசாயிகள், அனைத்து தரப்பு மக்கள் நடத்தும் போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும். குடி யரசு தினத்தன்று அனைத்து ஒன்றி யங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, ஒத்த அமைப்புகளு டன் இணைந்து, சிஏஏ, என்ஆர்சி சட்டத்தை திரும்ப பெற வலி யுறுத்தியும், அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக் கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகிறோம். 

மேலும், குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், ‘குடியுரிமை திருத் தச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் தொகை பதி வேடு, அதன் அடிப்படையில் தயா ரிக்கப்பட இருக்கும் தேசிய குடி மக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது’ என தமிழக அரசை வலி யுறுத்தும் தீர்மானங்களை ஜன நாயக அமைப்புகள், குடியிருப் போர் நலச் சங்கங்கள், உள் ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் நிறைவேற்ற வேண்டும்.  இதே போல் ஜன.30 ஆம் தேதி காந்தியடிகள் நினைவு தினத் தன்று, மக்கள் கூடும் இடங்களில் வர்க்க வெகுஜன அமைப்புகள், ஒத்த கருத்துடைய அமைப்புகளு டன், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து “மனிதச் சங்கிலி இயக்கம்” நடத்திடவும், தீர்மா னம் நிறைவேற்றப் பட்டுள்ளது” என்றார்.  இக்கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;