மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டாச்சிபுரம் வட்டக்குழு உறுப்பினர் எஸ்.கணபதி, ரேவதி ஆகியோரது புதிய இல்லமான ‘காரல்மார்க்ஸ்-பிருந்தாகாரத்’ இல்லத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வேல்மாறன், ஏ.வி.ஸ்டாலின்மணி, எம் செந்தில், வட்டச் செயலாளர் எம் முத்துவேல், ஆர்.தாண்டவராயன் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எஸ்.கணபதி நன்றி கூறினார்.