நாமக்கல், அக். 21- ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக் குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை கார ணமாக சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. மேலும், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அரு கிலுள்ள சி.பி கண்ணைய நாயுடு தெரு, லிங்கப்பா தெரு, இடையர் சந்து, மற்றும் ராசிபுரம் ஒரு வழி பாதை சாலை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீருடன் சாக்கடை கழிவுநீர் புகுந்து பாம்பு, புழுக்கள், கரப்பான் பூச்சிகள் என வீட்டுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கடந்த மூன்று வருடமாகவே இந்தப் பகுதிகள் முழுவதும் மழை காலங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்து வருகிறது. இது குறித்து அதிகாரி களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படாததால் மழைக்காலங்களில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றோம். மேலும், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகி றோம். எனவே, இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை உடனடியாக சரி செய்து மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பழுதடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள் ளனர்.