tamilnadu

பயணிகள் ஆட்டோ, இரு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

விருதுநகர், மே.31- விருதுநகர், பாத்திமாநகரில்  வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பயணிகள் ஆட்டோ மற் றும் இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்துச் சென்ற னர்.  விருதுநகர் நகராட்சிக்கு உட் பட்டது பாத்திமாநகர். இப்பகுதி யைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன். கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு இரு சக்கர வாக னம் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான பயணிகள் ஆட்டோ வும் வழக்கம் போல நிறுத்தி வைக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் அனைவரும் தங்களது வீட்டிற்குள் சென்று உறங்கி விட்ட னர். இந்நிலையில், நள்ளிரவு 12.30 மணிக்கு அங்கு வந்த மர்ம நபர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோவுக்கும் தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர். தீ எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அனை வரும் ஒன்று சேர்ந்து தீயை பிற பகுதி களுக்கு பரவ விடாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில், இரு வாகனங்களும் தீயில் எரிந்து சேத மாகின.  இதுகுறித்து ஆத்தியப்பன் விருதுநகர் பஜார் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.