கேம்ப் பள்ளியின் விரிவாக்கப் பணி துவக்கம்
உதகை,பிப்.10- மஞ்சூரில் உள்ள கேம்ப் பள்ளியின் விரி வாக்க பணிக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி, ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், விரிவாக்க பணிக்கான துவக்க நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் உள்ள கேம்ப் பள்ளியின் (அரசுப் பள்ளி) விரிவாக் கத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை உறுப்பினர் டி.கே.ரங்கரா ஜன் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனடிப்படையில், இப்பள்ளியின் விரி வாக்க பணிக்கான துவக்க நிகழ்ச்சி திங்க ளன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை வகித்தார். மஞ்சூர் காவல்துறை ஆய்வாளர் எ.தவ்லத் நிஷா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.ஆல்தொரை, எல்.சங்கரலிங்கம், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மேலும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மஞ்சூர் செயலாளர் அலியார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் குந்தா உற்பத்தி பிரிவு செயலாளர் முரளி, ஒப்பந்ததாரர் ராஜன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.