tamilnadu

img

6 மாத சாலை வரியை தள்ளுபடி செய்திடுக! சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

விருதுநகர், மே.11- 6 மாதத்திற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதம் வரை கடன் தவணையை நீட்டிப்பு செய்திட வேண்டுமென டூரிஸ்ட் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையா ளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள் கிழமை மனு அளித்தனர்.  இதுகுறித்து அம்மனுவில் கூறியதாவது: ஊரடங்கு அறிவித்த காரணத்தால் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களது வாழ்வாதா ரம் மிகவும் பாதிக்கப்பட்டு குடும்பம் மிகவும் சிரமத்தில் சிக்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தவணை காலத்தை மே வரை நீட்டிப்பு செய்தனர். தற்போது ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊர டங்கை அகற்றினாலும், முன்பு போல் தொழில் செய்ய முடி யாத நிலை உருவாகும். எனவே, வரும் ஆகஸ்ட் மாதம் வரை தவணை காலத்தை நீட்டிப்பு செய்திட வேண்டும்.  மேலும் மத்திய அரசு ஊர டங்கு காலம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான சாலை வரி யை ரத்து செய்திட வேண்டும் என அந்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.

;