கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டம் பாளையங்கோட்டை கீழ்பாதி பகுதியில் 30 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு குடி மனைப்பட்டா கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்டச் செயலாளர் வெற்றிவீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.