விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.