tamilnadu

ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வு

விருதுநகர், மே.20- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டது.  விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே 55 பேர் பாதிக்கப்பட்டி ருந்தனர். இந்நிலையில், மஹா ராஷ்டிரா மாநிலத்திலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் அனைவரும், தனி யார் கல்லூரிகளில் தங்க வைக்கப் பட்டனர். பின்பு, அவர்களுக்கு கொரோனா தொற்று பரி சோதனை செய்யப்பட்டது.  

இதில் விருதுநகர் அருகே நந்தி ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி மற்றும் அவரது மனைவி ஆகிய மூவருக்கும், மேலும் 37 வயதுடைய நபர் ஒரு வருக்கும், மேலும், திருவில்லி புத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து, 5 பேரையும் மதுரையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சுகாதாரத்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் 5 பேருக்கும் சிகிச்சையளித்து வருகின்றனர். இதையடுத்து, விருதுநகர் மாவட் டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதில் 37 பேர் ஏற்கனவே குண மடைந்து தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் 23 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

;