tamilnadu

தொழிலாளர்களுக்கு கொரோனா: பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூன் 21- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், ஆரோபுட் ஐபிபிஎல் பிஸ்கட் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்த புதுச்சேரியை சேர்ந்த கலைச்செல்வனுக்கு இம்மாதம் 15ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 18 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் பணிபுரிந்த ஐபிபிஎல் பிஸ்கட் கம்பெனியில் இன்று வரை இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த தொழிற்சாலையில் வானூர் மற்றும் திண்டிவனம் வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை. இதனால் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும்,  எனவே அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

;