tamilnadu

கூட்டு பாலியல் வல்லுறவு: ஆபத்தான நிலையில் இளம்பெண்

விழுப்புரம், ஜூன் 20- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட விநாயகபுரத்தில் வசிப்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த 18 இளம்  பெண் ஒருவர் அதே பகுதியை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த நல்லூரில் உள்ள ஒரு தனியார் கொசுவத்தி நிறுவனத்தில்  வேலை செய்து வந்துள்ளார். இவரும் அருகே  உள்ள சூரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (24)  என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு  வழக்கம் போல் வேலை முடிந்து வந்த அந்த பெண்ணும், அருள்ஜோதியும் ஊருக்கு இடையே உள்ள பள்ளிச்சேரி ரயில்வே கேட்  அருகே பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப் போது அங்கு குடி போதையில் வந்த 4 பேர்  அருள்ஜோதியை தாக்கி துரத்தி விட்டு அந்த  பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண்  சுயநினைவில்லாமல் ஆபத்தான நிலையில்  மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கண்டமங்க லம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் ஏ.சங்கரன்  குப்புசாமி, பலராமன், உலகநாதன், சங்கர்  உள்ளிட்டோர் பாதிக்கப் பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த குடும்பத்திற்கு ஆறு தல் கூறினர். பின்னர் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையினர்  உடனடி யாக கைது செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர்.