tamilnadu

பட்டாசுகள் வெடித்ததில் சிறுவன், சிறுமி படுகாயம்

வெம்பக்கோட்டை, ஆக.2- விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே உள்ளது வெற்றிலை யூரணி. இப்பகுதியைச் சேர்ந்த சரவ ணன், அவரது மனைவி ஜெயராணி(37). சரவணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில், ஜெய ராணி வீட்டில் அனுமதியின்றி சரவெடி, கார்ட்டூன் வெடி தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் ஜெய ராணியின் 16 வயது மகன் மறும் உறவின ரின் 15 வயது மகள் ஆகியோர் பட்டாசு தயா ரிக்கும் இடத்தில் இருந்ததாக கூறப்படு கிறது. அப்போது, திடீரென உலர வைக் கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பற்றி யது. இந்த விபத்தில் சிறுவன், சிறுமி இருவரும் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரு கின்றனர்.  வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.