tamilnadu

வறட்சி குறித்து பேச சட்டமன்றத்தை கூட்டுக: பெ. சண்முகம்

 விழுப்புரம், ஜூன் 10- விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி போராட் டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்  செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ தமி ழகத்தில் 24 மாவட்டங்கள் மழை அளவு குறைவு காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளதாக மார்ச்  21 ஆம் தேதி மாநில வருவாய் செயலாளர்  அதுல்ய மிஸ்ராஅரசாணை வெளியிட்டார்.  ஆனால், இதுவரைக்கும் நிவாரண அறி விப்பும், நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார். சென்னையில் மக்கள் குடிநீர் கிடைக்கா மல் தண்ணீர் வண்டிகளுக்கு பின்னால் காலி  குடங்களுடன் அலையும் அவல நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். அந்த மக்க ளின் தண்ணீர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வ மான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், சட்டமன் றத்தை உடனடியாக கூட்டி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார ணம், கூட்டுறவு, தேசிய வங்கிகளில் விவசா யிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி,பயிர் காப்பீடு செய்ய வும் உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.