விழுப்புரம்.டிச.11- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத் திற்குட்பட்ட நல்லான் பெற்றால் பிள்ளை கிராமத்தில் பாரதி நகரில் சுமார் 300 குடும்பத்தைச் சேர்ந்த 2500 அருந்ததியின மக்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக நிரந்தரமாகக் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு இதுவரை குடி நீர், தெருவிளக்கு உள்ளிட்ட போதுமான அடிப் படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும், இந்த கிராமத்தில் இறந்தவர் களை எடுத்துச்சென்று அடக்கும் செய்ய மயான பாதை இல்லை. மயான பாதை அமைத்துக் கொடுக்க வேண்டி பல ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள். இதற்காக ஏறி இறங்காத அலுவலகமே இல்லை என்று கூறுகின்றனர் இந்த மக்கள். இம் மாதம் 9 ஆம் தேதி விழுப்புரம் ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் ஆதித் தமிழர் கட்சியை சார்ந்த மாவட்டச் செயலா ளர் க.சிவகுரு தலைமையில் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கொடுத்தனர். அதில் தாங்கள் அப்பகுதியில் கடந்த மூன்று தலைமுறைகளாக நிரந்தரமாக வசித்து வருகிறோம். தெரு வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை போதுமான அளவில் செய்து கொடுக்கப்பட வில்லை. தங்களுக்கும், தங்கள் பிள்ளை களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வில்லை. எங்கள் கிராமத்தில் இறந்தவர் களை எடுத்துச் சென்று எரிப்பதற்கோ, புதைப்பதற்கோ மயானம் கொண்டு செல்ல சரியான சாலை வசதி இல்லை. இதுகுறித்து பல்வேறு கோரிக்கை மனுக் களை கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தாங்களாவது இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்கள் பகுதிக்கு தெரு, சாதிச் சான்றிதழ் மற்றும் மயான பாதை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவித்து உள்ளனர்.