திருவில்லிபுத்தூர், மே 16- கொரானோவால் இந்தாண்டு சித்தி ரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. சில நிகழ்வுகள் மட்டும் நடைபெற்றன. அதனொரு பகுதியாக கடந்த வாரம் கள்ளழகருக்கு திருவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை, கிளி, வஸ்திரம் அனுப்பி வைக்கப் பட்டது அதற்கு கைமாறாக அழகர் கோவிலி லிருந்து அழகர் அணிந்திருந்த பட்டுப் புடவை, பட்டு வஸ்திரம் ஆகியவை திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை ஆண் டாளுக்கு கோவில் நிர்வாகம் அணி வித்தது. இதையொட்டி சிறப்பு பூஜை கள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடு களை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.