வலசக்கல் ஏரி 2 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது
சேலம், நவ.10- சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி 2 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இப்பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க பொதுப் பணித்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்தித் கும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் 2 ஆண்டுக ளுக்கு பின்பு வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி உள்ளது. இந்த ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி 74 கிருஷ் ணாபுரம்,கெங்கவல்லி, வலக்கல்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடி நீர்ஆதாரமாக விளங்குவதோடு, ஆயிரம் ஏக்கர்விளை நிலங்களுக்கு நீர் பாசன வசதியாகவும் விளங்கி வருகிறது. இதன் உபரி தண்ணீர் சுவேத நதியில் கலந்து வீணாகிறது. இந்நிலையில் ஏரியின் கிழக்கு புறம் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந் தால் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெரும். எனவே பொதுப்பணித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஏரிப் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். இதுகுறித்து ஏரிப் பாசன விவசாயிகள் கூறுகையில், பச்சமலைப் பகுதில் கனமழை பெய்யும் போதெல்லாம் வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி விடுகிறது. இதனால் ஏரியின் கிழக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து விடும். இது குறித்து பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே இந்த தடவையாவது வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென கேட்டு கொள்வதாக தெரி வித்தனர்.