விருதுநகர், அக்.24- கண்களைக் கட்டிக் கொண்டு பள்ளி மாணவி ஒருவர் 45 நிமிடத்தில் 26 விதமான செயல்களை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார். விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு பயிலும் மாணவி ஹர்ஷ நிவேதா(12). இவர் யோகக் கலையை சிறுவயது முதல் கற்று வந்தார். இதனால், அவர் யோகா வில் பல சாதனைகளையும் படைத்துள்ளார். இந்நிலையில் புதனன்று உலக சாதனை செய்யும் முயற்சி யில் ஈடுபட்டார். தனது இரு கண்களையும் கருப்பு துணி யால் கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், அப்துல்கலாம் படம் வரைதல், எழுதுதல் மற்றும் பல்வேறு வடிவங்க ளில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள க்யூப்பை சரிசெய்தல், கண்களை கட்டியபடியே சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட 26 வகையான செயல்களை 45 நிமிடத்தில் செய்தார். இச்சாத னையை அவர் செய்ததால், யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன் சீனாவை சேர்ந்த சிறுவன் கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு கியூப் சரி செய்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. இந்தச் சாதனையை படைத்ததற்காக ஹர்ஷ நிவேதாவுக்கு டேலண்ட் ஹிட் வேர்ல்டு ரெக்கார்டு அவார்டு வழங்கப்பட்டது.கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இல்லாத பல சாதனைகளை செய்த மாணவி ஹர்ஷ நிவேதாவிற்கு பாராட்டுமழை குவிந்து வருகிறது. இதுகுறித்து மாணவி தெரிவிக்கையில் கண்கள் தெரியாத மாற்றுத்திறனாளிகளும் சாதனை படைக்க முடியும் என்பதை வலியுறுத்தி இச்சாதனையை செய்த தாக தெரிவித்தார்.