tamilnadu

img

14 மாதங்கள் ஊதியம் வழங்காத பி.எஸ்.என்.எல் நிர்வாகம் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர் மனு

விருதுநகர், மே 20- விருதுநகர் மாவட்டத்தில் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு 14 மாத ஊதியத்தை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் வழங்கவில்லை. இதனைக் கண்டித்தும், உடனடியாக ஊதி யத்தை வழங்கிடக் கோரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இணைந்து மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தினர். விருதுநகர் பொது மேலாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.இளமாறன் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் ஏ.சமுத்திரக்கனி பேசி னார். ஏ.ஐ.பி.டி.பி.எஸ் மாவட்டப் பொருளா ளர் எம்.பெருமாள்சாமி ஆதரித்து பேசி னார். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.முத்துச்சாமி கண்டன உரை யாற்றினார்.  இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்ற னர்.