tamilnadu

img

வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவதை ஏன் தடை செய்யக்கூடாது? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை:
 குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதால் ஏன் ஒட்டுமொத்தமாக வழக்கறிஞர்ஸ்டிக்கர்  வாகனங்களில் ஒட்டுவதை தடை செய்யக்கூடாது  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

பார் கவுன்சில் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை  சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் ஒட்டுவதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். அவர்  தாக்கல் செய்த  மனுவில், மதுரையில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டிசட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்
கள், கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம்சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.இருசக்கர வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் குறித்து பார் கவுன்சில் உறுப்பினர்மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் வாகனங்களை நிறுத்திக் கேட்டால் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என கூறுகின்றனர். மேலும் மற்ற மாநிலங்களில் அதிக அளவு சட்டக் கல்லூரி உருவாகத் தொடங்கியுள்ளது .இதன்காரணமாக ரவுடிகள் பலர் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரியில் இருந்து பணம் கொடுத்துபட்டங்களைப் பெற்று வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்தி காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வருகின்றனர்.

எனவே 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை  சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு  புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதால், ஏன் ஒட்டுமொத்தமாக வழக்கறிஞர்ஸ்டிக்கர்  வாகனங்களில் ஒட்டுவதை தடைசெய்யக்கூடாது  என்று கேள்வி எழுப்பினர்.மேலும் வழக்கில் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை தலைவரை எதிர் மனுதாரராக சேர்த்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நவம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.