tamilnadu

img

சிறுவனின் உடலை காட்சிப்படுத்தாதது ஏன்? வருவாய் ஆணையர்

சென்னை,அக்.30- ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுஜித் சடலத்தை காட்சிப்ப டுத்தாதது ஏன் என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் நிர்வாக ஆணை யர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித் துள்ளார்.  சென்னை எழிலகத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், “சுஜித் உயிரி ழந்தது துரதிருஷ்டவசமானது, சுஜித்தைக்  காப்பாற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். ஆனால் முடிவு எதிர்மறையாக கிடைத்து விட்டது”என்றார். சுஜித்தின் உடலை காட்சிப்படுத்தாதது தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த அவர்,  சடலத்தை மீட்பது குறித்த மத்திய அரசின்  வழிகாட்டுதல்களின் படியே செயல்பட்ட தாக விளக்கம் அளித்தார். கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த சிறார்களின் சடலங் களை காட்சிப்படுத்தியதால் உலக அள வில் விமர்சனத்திற்கு ஆளானதை அவர் சுட்டிக் காட்டினார்.