tamilnadu

img

தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் முயற்சியை முறியடிப்போம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் முயற்சியை முறியடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா தொற்று உழைப்பாளிகள் மற்றும் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வை சிதைத்துள்ள நிலையில் இதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்  படாமல் சில முதலாளி சங்கங்கள், தொழிலாளர் களின் பல்வேறு உரிமைகளை, தேசத்தின் நலன் என்ற முகமூடியோடு பறித்திட முனைந்துள்ளன. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற பாஜக அரசு ஏற்கெனவே, தொழிலாளர்கள் போராடி பெற்ற பல உரிமைகளை சட்டத் திருத்தத்தின் மூலம் பறித்துக் கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசாங்கம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியி லிருந்து 12 மணி நேரமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒத்திசைவு பட்டியலில் தொழி லாளர் நலன் இருப்பதால் இதை பயன்படுத்திக் கொண்டு சில மாநில அரசுகளும் வேலை நேரத்தை  12 மணி நேரமாக மாற்றி அறிவிக்கைசெய்துள்ளன.

கூடுதலாக பணிபுரியும் 4 மணி நேரத்திற்கு 2 மடங்கு சம்பளம் என்பதற்கு பதிலாக விகிதாச்சார முறையில் வழக்கமான சம்பளமே கொடுத்தால் போதும் என்று அறிவிக்கையினை குஜராத் மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கை கள் சட்டத்திற்கும், இந்தியா ஏற்றுக்கொண்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் எதிரான தாகும். இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலையின்மையை பல மடங்கு அதிகரிக்கும்.

முதலாளிகளின் ஆலோசனையை தூக்கியெறிக!

பிரிட்டிஷ் இந்தியாவிலும், விடுதலைக்குப் பின்பும் எந்தவொரு ஆட்சியாளர்களும் செய்வதற்கு துணியாத ஒரு அடாத செயலை தற்போதைய மத்திய அரசாங்கம் மற்றும் சில மாநில அரசாங்கங்கள் செய்ய துணிந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு, முதலாளிகள் சங்கங்களிட மிருந்து வந்துள்ள இத்தகைய ஆலோசனைகளை துச்சமென தூக்கி எறிய வேண்டுமென  தமிழக முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கேட்டுக் கொள்கிறது. தொழிலாளி வர்க்கம் ஒன்று பட்டு இந்த அடாவடித்தனத்தை முறியடிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.