சென்னை, பிப். 17- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின்போது தடியடி நடத்தப் பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக தமிழ சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்து களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி பதிலளிக்கையில், “அனுமதியை மீறி போராட்டம் நடத்தினர். பேருந்து கண்ணாடி களை உடைத்தது என கலவரத்தில் ஈடு பட்டனர். கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்ட காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில், கற்களை வீசி கலவரத்தில் ஈடு பட்டனர். வெளியில் இருந்து வந்த சிலர் உள்ளூர் மக்களை தூண்டி சாலை மறிய லில் ஈடுபடுத்த முயன்றனர். பேச்சுவார்த்தை யில் ஒப்புக் கொண்டபடி கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்” என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக 82 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடைபெற்ற 6 தெருக்கள் தள்ளி, மூப்பு காரணமாக உயிரி ழந்த முதியவரை, போராட்டத்தில் பங் கேற்று உயிரிழந்ததாக சிலர் வதந்தியை பரப்பினர் என்றும் சிறுபான்மையின மக்க ளுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் கூறினார். இதனையடுத்து முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன ஆளும் கூட்டணியை சேர்ந்த தமிமுன் அன்சாரியும் வெளிநடப்பு செய்தார்.