சென்னை ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் அறிவிப்பு
சென்னை, ஜூலை 29 - புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி புதனன்று (ஜூலை 31) தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளி யிட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு ஆட்சியாளர்கள் கருத்து கேட்பு கூட்டங்களை ரகசியமாக நடத்தி வரு கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் திங்களன்று (ஜூலை 29) சென்னை சேப்பாக்கம் அரசு விருத்தினர் மாளி கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பேசிய சங்கத்தின் தலைவர்கள், ஆட்சியா ளர்களின் நடவடிக்கை ஜனநாய கத்திற்கு புறம்பானது. ஒரு வரைவு அறிக்கையை மக்களின் ஒப்புதலோடு தான் நிறைவேற்ற வேண்டும். அதற்கு மாறாக, ரகசிய கூட்டங்கள் நடத்து வதை கைவிட வேண்டும் என்றனர். கல்வி அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும். மாநில உரிமை யைப் பறித்து, இந்தியைத் திணித்து, தாய்மொழி வழி கல்வியை ஒழிக்கும் முறையை ஏற்க முடியாது. 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்து வதையும், தனியார் கார்ப்பரேட்களிடம் கல்வியை தாரைவார்ப்பதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர். இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 31 அன்று மாநிலம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன், துணைத் தலைவர்கள் க. நிருபன் சக்கரவர்த்தி, ம. கண்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ. சந்துரு உள்ளிட்டோர் பேசினர். இப்போராட்டத்தை தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் மாணவர் சங்கத் தலைவர்கள் மனு அளித்தனர்.